கோவை, டிசம்பர் 18
விமான நிலைய விரிவாக்கத்திற்கு நில எடுப்பு செய்யும்போது மனிதக் கழிவுநீர் தொட்டி பாதிக்கப்படுவதால். அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என பூங்காநகர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- கோவை விமான நிலையம் அருகே பூங்கா நகர் பகுதியில் 1994-ஆம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரியத்தால் மனைப்பகுதி பிரிக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த குடியிருப்பு வாரியத்தில் பாதாள சாக்கடை, சாலை வசதி, மழைநீர் வடிகால், மனிதக் கழிவுநீர் தொட்டி உள்ளிட்டவற்றை வீட்டுவசதி வாரியமே கட்டிக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில், தற்போது விமான நிலைய விரிவாக்கத்திற்காக பூங்காநகர் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டி அபகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால், பாதாள சாக்கடை முழுவதும் அடைபடும். எனவே, நில எடுப்பு செய்யும் முன் அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய விரிவாக்கத்திற்கு நில எடுப்பு செய்யும்போது மனிதக் கழிவுநீர் தொட்டி பாதிக்கப்படுவதால். அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என பூங்காநகர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- கோவை விமான நிலையம் அருகே பூங்கா நகர் பகுதியில் 1994-ஆம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரியத்தால் மனைப்பகுதி பிரிக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த குடியிருப்பு வாரியத்தில் பாதாள சாக்கடை, சாலை வசதி, மழைநீர் வடிகால், மனிதக் கழிவுநீர் தொட்டி உள்ளிட்டவற்றை வீட்டுவசதி வாரியமே கட்டிக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில், தற்போது விமான நிலைய விரிவாக்கத்திற்காக பூங்காநகர் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டி அபகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால், பாதாள சாக்கடை முழுவதும் அடைபடும். எனவே, நில எடுப்பு செய்யும் முன் அதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.