டிசம்பர் 18
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியும், மற்றவர்களும் கூறும் குற்றச்சாட்டு ஏற்க முடியாது. இதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டோம். வாக்குப்பதிவு அன்று யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் ஒப்புகை சீட்டும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்த்து இருக்கிறார்கள்.
ஆதலால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டு இருந்தன. என்றார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியும், மற்றவர்களும் கூறும் குற்றச்சாட்டு ஏற்க முடியாது. இதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டோம். வாக்குப்பதிவு அன்று யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் ஒப்புகை சீட்டும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்த்து இருக்கிறார்கள்.
ஆதலால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டு இருந்தன. என்றார்.