திருப்பூர், டிசம்பர் 17
அர்ஜெண்டினா நாட்டின் தலைநகரான புவனேஸ்ஜரேஸ் நகரில் உலக வர்த்தக அமைப்பு சார்பில் 11-வது மந்திரிகள் மாநாடு நடைபெற்றது.
164 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், 64 நாட்டு விவசாயிகள் அமைப்புகளும் இணைந்த லா- வியா கேம்பசினா விவசாய சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் செல்லமுத்து தலைமையில் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் கலந்துகொண்டு விமானம் மூலம் சென்னை வந்த விவசாயிகள் பின்னர் ரயில் மூலம் திருப்பூர் வந்தனர். திருப்பூர் ரயில் நிலையத்தில் வந்தடைந்த செல்லமுத்துவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறுகையில், மாநாட்டில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் இந்திய விவசாயிகள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை அழிக்கும் கட்டுப்பாடற்ற வர்த்தகம் கூடாது என வலியுறுத்தப்பட்டது. மாநாட்டில் விவசாயிகளுக்கு எதிராக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாதது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.
அர்ஜெண்டினா நாட்டின் தலைநகரான புவனேஸ்ஜரேஸ் நகரில் உலக வர்த்தக அமைப்பு சார்பில் 11-வது மந்திரிகள் மாநாடு நடைபெற்றது.
164 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், 64 நாட்டு விவசாயிகள் அமைப்புகளும் இணைந்த லா- வியா கேம்பசினா விவசாய சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் செல்லமுத்து தலைமையில் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் கலந்துகொண்டு விமானம் மூலம் சென்னை வந்த விவசாயிகள் பின்னர் ரயில் மூலம் திருப்பூர் வந்தனர். திருப்பூர் ரயில் நிலையத்தில் வந்தடைந்த செல்லமுத்துவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறுகையில், மாநாட்டில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் இந்திய விவசாயிகள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை அழிக்கும் கட்டுப்பாடற்ற வர்த்தகம் கூடாது என வலியுறுத்தப்பட்டது. மாநாட்டில் விவசாயிகளுக்கு எதிராக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாதது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.