கோவை, டிசம்பர் 17
கேஎம்சிஎச் மருத்துவமனையில் “மயக்க மருத்துவவியலில் அவசர நிலை” என்ற தலைப்பில் தொடர் மருத்துவக் கல்வியாக ஒரு நாள் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதிலுமிருந்து மயக்கவியல் மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள், மயக்கவியல் தொழில்நுட்பத்தினர், செவிலியர்கள் என 250-க்கும மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைதொடர்ந்து, கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிச்சாமி தலைமை உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், மயக்க மருத்துவ அவசர நிலைகள் குறித்த இந்தப் பயிற்சியை வழங்கிய மயக்கவியல் துறைக்கு வாழ்த்துக்கள். இந்த மருத்துவமனையின் மயக்கவியல் துறை 18 மருத்துவர்களடங்கிய, 24 மணிநேரமும் செயல்படும் ஒரு துறையாகும். அனைத்து அறுவைச் சிகிச்சைக் கூடங்களும் மயக்க நிலையைக் கண்காணிக்கும், மேலைநாட்டு மருத்துவமனைகளுக்கு நிகரான, நவீன மருத்துவக் கருவிகளைக் கொண்டுள்ளன. எனவே, முன்னரே முடிவு செய்யப்பட்ட அல்லது அவசர நிலை காரணமாக அன்றாடம் செய்யப்படும் சிறிய அல்லது சிக்கலான அறுவை சிகிச்சைகளும் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் தலைவரான டாக்டர் என். செல்வராஜன் மற்றும் செயலரான டாக்டர் சுப்பையா செல்லையா ஆகியோர் இந்த பயிற்சி வகுப்பு, மயக்க நிலையில் எதிர்பாராமல் நிகழக்கூடிய அவசர நிலைகளில் நோயாளிகளை பாதுகாப்பாகக் கண்காணிக்கும் அறிவையும், திறனையும் மேம்படுத்தும் என்று கூறினர்.
கேஎம்சிஎச் மருத்துவமனையில் “மயக்க மருத்துவவியலில் அவசர நிலை” என்ற தலைப்பில் தொடர் மருத்துவக் கல்வியாக ஒரு நாள் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதிலுமிருந்து மயக்கவியல் மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள், மயக்கவியல் தொழில்நுட்பத்தினர், செவிலியர்கள் என 250-க்கும மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைதொடர்ந்து, கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிச்சாமி தலைமை உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், மயக்க மருத்துவ அவசர நிலைகள் குறித்த இந்தப் பயிற்சியை வழங்கிய மயக்கவியல் துறைக்கு வாழ்த்துக்கள். இந்த மருத்துவமனையின் மயக்கவியல் துறை 18 மருத்துவர்களடங்கிய, 24 மணிநேரமும் செயல்படும் ஒரு துறையாகும். அனைத்து அறுவைச் சிகிச்சைக் கூடங்களும் மயக்க நிலையைக் கண்காணிக்கும், மேலைநாட்டு மருத்துவமனைகளுக்கு நிகரான, நவீன மருத்துவக் கருவிகளைக் கொண்டுள்ளன. எனவே, முன்னரே முடிவு செய்யப்பட்ட அல்லது அவசர நிலை காரணமாக அன்றாடம் செய்யப்படும் சிறிய அல்லது சிக்கலான அறுவை சிகிச்சைகளும் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் தலைவரான டாக்டர் என். செல்வராஜன் மற்றும் செயலரான டாக்டர் சுப்பையா செல்லையா ஆகியோர் இந்த பயிற்சி வகுப்பு, மயக்க நிலையில் எதிர்பாராமல் நிகழக்கூடிய அவசர நிலைகளில் நோயாளிகளை பாதுகாப்பாகக் கண்காணிக்கும் அறிவையும், திறனையும் மேம்படுத்தும் என்று கூறினர்.