கோவை, டிசம்பர் 17
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ- கிராப் கூட்டமைப்பினர் இன்று சிவானந்தாகாலனி பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆறாவது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து ஏழாவது ஊதியக்குழுவின் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ- ஜியோ- கிராப்' கூட்டமைப்பினர் முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில், இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி சிவானந்தா காலனி பகுதியில் அந்த அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமைப்பின் மாவட்டத் தலைவர் தேசிங்குராஜன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ- கிராப் கூட்டமைப்பினர் இன்று சிவானந்தாகாலனி பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆறாவது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து ஏழாவது ஊதியக்குழுவின் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ- ஜியோ- கிராப்' கூட்டமைப்பினர் முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில், இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி சிவானந்தா காலனி பகுதியில் அந்த அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமைப்பின் மாவட்டத் தலைவர் தேசிங்குராஜன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
