கெயில் திட்டம் : 7 பேர் கொண்ட பாஜக குழுவிற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

கோவை, டிசம்பர் 16

தமிழகத்தில் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட 7 பேர் கொண்ட பாஜக குழுவை கலைக்குமாறு கொங்கு மண்டல விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கோவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 7 கொங்கு மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழக பாஜகவால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலையும், அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர். 



இக்கூட்டத்தில், கெயில் நிறுவனத்திற்கு இடையூறற்ற பயன்பாட்டாளர் என்ற அங்கீகாரத்தை வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு வலியுறுத்துவதைக் கண்டித்தும், கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தை சுமூகமாக நிறைவேற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட உயர்நிலை தொழில்நுட்பக் குழுவில், பாதிக்கப்பட்ட  விவசாயிகளையும் உறுப்பினராகச் சேர்த்து களஆய்வு மேற்கொண்டு திட்டத்தை செயல்படுத்தப் பிரதமர் உத்தரவிடக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், கெயில் எரிவாயு குழாய் திட்டம் போன்று, பெட்ரோலிய நிறுவனங்கள் மேலும் பலகுழாய்களை பதிக்கும் திட்டங்களை இதேபகுதியில் விளைநிலங்களின் வழியாகச் செயல்படுத்த தயாராவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வாக, குஜராத் மற்றும் வளர்ந்த நாடுகளைப் போன்று பட்டா நிலங்களை மத்திய, மாநில அரசுகள் விலைக்கு வாங்கி அரசு நிலமாக மாற்றியமைத்து, அதன் வழியாக எரிவாயு குழாய்களையும், மின்சார உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் போன்ற அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளலாம் எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய பெட்ரோலியம் மினரல்ஸ் பைப்லைன் திட்டம் 1962-ல் உள்ள பயனாளியின் உரிமை (right of user)  என்ற பிரிவையும், உயர்மின் கோபுரங்கள் அமைத்திட 1882 ஆம் ஆண்டு டெலகிராபிக் சட்டத்தில் உள்ள சரியான வழி (right of way) என்ற பிரிவையும் அறவே நீக்கிடவும், கெயில் திட்டத்தை நெடுஞ்சாலை வழியாகச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...