கோவை, டிசம்பர் 15
கோவையில் அடுத்தடுத்து ஏடிஎம்-களில் ரூ. 30 லட்சம் கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் 8 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம்களில் கொள்ளையடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தலைமறைவாகினர். இதையடுத்து, அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீஸார், நாமக்கல் மற்றும் சேலத்தில் பதுங்கியிருந்த ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தானைச் சேர்ந்த மெளசம்கான், அமீன், ஜீல்பிகர், ஹரியானாவைச் சேர்ந்த அமித்குமார், சுபேர், முபாரக், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்டாக், உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுபேர் ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர், சேலத்தில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து பின்பு கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவையில் அடுத்தடுத்து ஏடிஎம்-களில் ரூ. 30 லட்சம் கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள் 8 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம்களில் கொள்ளையடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தலைமறைவாகினர். இதையடுத்து, அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீஸார், நாமக்கல் மற்றும் சேலத்தில் பதுங்கியிருந்த ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜஸ்தானைச் சேர்ந்த மெளசம்கான், அமீன், ஜீல்பிகர், ஹரியானாவைச் சேர்ந்த அமித்குமார், சுபேர், முபாரக், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்டாக், உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுபேர் ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர், சேலத்தில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து பின்பு கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.