இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி - முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, டிசம்பர் 13

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு. கே. பழனிசாமி ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி உதவி அறிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்காக ராஜஸ்தானுக்குச் சென்ற போது ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு இன்ஸ்பெக்டர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரியபாண்டியின் மரணச் செய்தி தமிழக காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி தரவேண்டும் எனவும், படுகாயம் அடைந்த ஆய்வாளர் முனிசேகருக்கு அரசு செலவில் உரிய உயர் சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனிடையே, பெரியபாண்டியின் மரணம் குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் அளிக்கப்படும். அவரது இரண்டு மகன்களின் படிப்புச் செலவையும் அரசே ஏற்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் முனிசேகர், தலைமைக் காவலர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் மற்றும் மருத்துவச் செலவை தமிழக அரசு முழுமையாக ஏற்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...