கோவை, டிசம்பர் 13
சபரிமலை தீர்த்த யாத்திரை மேற்கொள்ளும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக RFID என்னும் திட்டத்தினை வோடாபோன் அறிமுகம் செய்துள்ளது.
வோடபோன் கேரளா காவல்துறையுடன் இணைந்து RFID என்ற டேக் அறிவித்துள்ள இத்திட்டம் சபரிமலை தீர்த்த யாத்திரை செல்லும்போது குழந்தைகள் தொலைந்து போகாமல் இருக்க உதவுகிறது.

இந்த டேக் பம்பாவில் 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு யாத்திரை ஆரம்பிக்கும் இடங்களில் கொடுக்கப்படும். குழந்தைகள் பம்பாவிலிருந்து சன்னிதானம் வரை இது அனுமதிக்கப்படும்.
சபரிமலையில் யாத்திரை செய்யும் பக்தர்களுக்கு கேரள மாநில காவல்துறை அறிவித்துள்ள இதனைப் பெற காவல்நிலையத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இந்த RFID டேக் கொடுக்கப்படும். அதில் குழந்தையின் பெயர், குழந்தையின் உரிமையாளரின் பெயர், தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் பிற தகவல்களும் அடங்கி இருக்கும். அசாதாரண சூழ்நிலையில் குழந்தை உரிமையாளரிடம் இருந்து தவறும் பட்சத்தில் இத்தகவலின் மூலம் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவர்.
மேலும், ஒவ்வொரு முறையும் RFID டேக் உடன் ரீடிங் போஸ்ட் கடக்கும்பொது லோகேசன் தகவல் உடன் பதிவு எண் அட்டையில் ஏற்றப்படும். இதனால், தற்போது குழந்தை எப்பகுதியில் உள்ளது என்பதையும் எளிதில் அறியலாம்.
இத்திட்டம், சபரிமலையில் மகர விளக்கு பூஜை முடியும் வரை செயல்படுத்தப்படவுள்ளது.