காங்கிரஸ் நிர்வாகி அளித்த காசோலை மோசடி புகாரை சட்டரீதியாகச் சந்திப்பேன் - கராத்தே மாஸ்டர் டோனி பொன்னையா பேட்டி

கோவை, டிசம்பர் 12

கோவை காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் அளித்த காசோலை மோசடி புகாரை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என மலேசியா நாட்டைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் டோனி பொன்னையா தெரிவித்துள்ளார். 

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு ஹயாசி - ஹா கராத்தே கழகம் செயல்பட்டு வருகிறது. 1976-ல் சென்னையில் துவங்கப்பட்ட இந்தக் கழகம் தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், இந்தியாவில் 9 மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிற்கான இந்திய பொறுப்பாளராக மலேசியா வாழ் தமிழர் டோனி பொன்னையா உள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணா கல்லூரியில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வந்த டோனி பொன்னையாவின் மீது காசோலை மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன், தனக்கு திருப்பூரில் அறிமுகமானார். 2002-ம் ஆண்டு அவரை ஹயாசி-ஹா கராத்தே கழக இந்திய செயலாளராக நியமிக்கப்பட்டார். 



இந்நிலையில், கோவை கருமத்தம்பட்டியில் தனக்கு, மனோகரன் வங்கி கணக்குத் தொடங்கிக் கொடுத்தார். கராத்தே கழக வளர்ச்சிக்கு தன்னிடம் இருந்து ரூ. 10 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். பணத்தைத் திருப்பி கேட்டபோது ரூ. 2 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்தார். எஞ்சிய தொகையைக் கேட்டதற்கு, பணத்தை ஏமாற்றும் நோக்கில், அவரிடம் கொடுத்து வைத்திருந்த தனது பெயரில் துவங்கப்பட்ட வங்கியின் காசோலையில் போலியாகக் கையெழுத்திட்டு பணம் எடுக்க முயற்சித்தார். அந்தக் காசோலை, தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி விட்டது. இதனால், அவர் தனது சகோதரர் சந்திரசேகர் மூலம் புகார் அளித்துள்ளார். 

இந்தப் புகார் குறித்து நீதிபதியிடம் தன் தரப்பு நியாயங்களைத் தெரிவித்துள்ளேன். மேலும், அகில இந்திய செயலாளர் பதவியில் இருந்து மனோகரன் நீக்கப்பட்ட பின்னரும், போலி கையெழுத்திட்டு சான்றிதழ்கள் வழங்கியுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் அளித்த புகார் மீது சட்டரீதியாக சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...