குமரியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் : உயிரிழந்த மீனவர்களுக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

டிசம்பர் 12 

ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் சென்றார். மாவட்ட எல்லையான காவல் கிணற்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. மற்றும் அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

காவல்கிணற்றில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேராக தூத்தூர் மீனவ கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள புனித யூதா ததேயூ கல்லூரியில் 8 கிராம மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ஓகி புயலில் வீடு இழந்தவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். பின்னர், மாயமான மீனவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.



பின்னர், அங்கிருந்து மணவாளக்குறிச்சியை அடுத்த வெள்ளிமலை கல்படி ஏலாவில் விவசாயிகளை சந்தித்துப் பேசிய அவர்,  அங்குச் சேதமான பயிர் நிலங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குமரி மாவட்டம் வருகையையோட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...