கோவை, டிசம்பர் 10
அரசு சாரா மருத்துவர்களை பணியமர்த்திய விவகாரத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் துப்புரவு பணி செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசுசாரா மருத்துவர்களை நேரடியாக தேர்வை செய்ததின் மூலம், அனுபவமுள்ள அரசு மருத்துவர்களுக்கும் , அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் கிடக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.
முறையாக கலந்தாய்வு நடத்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட வேண்டிய நிலையில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நேர்முகத் தேர்வு நடத்தி அரசு சாரா மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி முதுகலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் கடந்த நவம்பர் 29-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில் அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கப்பெறாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதன்படி, நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து கருப்பு நிற பலூண்களை பறக்கவிட்டும், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
12-வது நாளான இன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பைகளை துடைப்பத்தின் மூலம் அகற்றி அரசிற்கு எதிர்ப்பினை தெரிவித்தனர்.
அரசு சாரா மருத்துவர்களை பணியமர்த்திய விவகாரத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் துப்புரவு பணி செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிய அரசுசாரா மருத்துவர்களை நேரடியாக தேர்வை செய்ததின் மூலம், அனுபவமுள்ள அரசு மருத்துவர்களுக்கும் , அரசு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் கிடக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.
முறையாக கலந்தாய்வு நடத்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட வேண்டிய நிலையில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நேர்முகத் தேர்வு நடத்தி அரசு சாரா மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி முதுகலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் கடந்த நவம்பர் 29-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தில் அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கப்பெறாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதன்படி, நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து கருப்பு நிற பலூண்களை பறக்கவிட்டும், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
12-வது நாளான இன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பைகளை துடைப்பத்தின் மூலம் அகற்றி அரசிற்கு எதிர்ப்பினை தெரிவித்தனர்.