டிசம்பர் 8
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்குக் கலச மஹாலில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு, டிசம்பர் 25 வரை 3 மாத அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.. திமுக வழக்கறிஞர் சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கணவர் மாதவன் பேட்ரிக், மருத்துவர் சிவக்குமார், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், சிலருக்கு சம்மன் அனுப்பியுள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் எனத் தமிழக அரசின் பொதுத்துறைக்கு ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்குக் கலச மஹாலில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு, டிசம்பர் 25 வரை 3 மாத அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.. திமுக வழக்கறிஞர் சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கணவர் மாதவன் பேட்ரிக், மருத்துவர் சிவக்குமார், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், சிலருக்கு சம்மன் அனுப்பியுள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் எனத் தமிழக அரசின் பொதுத்துறைக்கு ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளார்.