கோவை, டிசம்பர் 8
நாளை முதல் கோவை புரூக் பாண்ட் சாலை இருவழிப் பாதையாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் இருந்து வடகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்த புரூக்பாண்ட் சாலை ஒரு வழிப்பதையாக மாற்றப்பட்டது.
இந்த மாற்றத்தால் அவினாசி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் பூ மார்க்கெட் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைய வேண்டி இருந்தது. இதனால் பூ மார்க்கெட் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, புரூக்பாண்ட் சாலை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.
இது குறித்து போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் S.முருகன் கூறுகையில், புரூக்பாண்ட் சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் K.பெரியய்யா மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் ஆகியோர் நேற்று மாலை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சாலை சீரமைக்கப்பட்டது. செண்டர் மீடியன் கற்களை சாலைகளின் நடுவே அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

நாளை காலை 7 மணி முதல் புரூக்பாண்ட் சாலை இருவழிப்பாதையாக மாற்றி திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புரூக்பாண்ட் சாலை இருவழிப்பாதையாக மற்றப்படும் போது பூ மார்க்கெட் பகுதியிப் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை முதல் கோவை புரூக் பாண்ட் சாலை இருவழிப் பாதையாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் இருந்து வடகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்த புரூக்பாண்ட் சாலை ஒரு வழிப்பதையாக மாற்றப்பட்டது.
இந்த மாற்றத்தால் அவினாசி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் பூ மார்க்கெட் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைய வேண்டி இருந்தது. இதனால் பூ மார்க்கெட் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, புரூக்பாண்ட் சாலை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.
இது குறித்து போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் S.முருகன் கூறுகையில், புரூக்பாண்ட் சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் K.பெரியய்யா மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் ஆகியோர் நேற்று மாலை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சாலை சீரமைக்கப்பட்டது. செண்டர் மீடியன் கற்களை சாலைகளின் நடுவே அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

நாளை காலை 7 மணி முதல் புரூக்பாண்ட் சாலை இருவழிப்பாதையாக மாற்றி திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புரூக்பாண்ட் சாலை இருவழிப்பாதையாக மற்றப்படும் போது பூ மார்க்கெட் பகுதியிப் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.