கோவை, டிசம்பர் 7
கோவையில் கொடி நாள் நிதி திரட்டும் பணியில் ஊர் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்க ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 7-ம் நாள் கொடி நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில் அரசு துறை அலுவலர்கள் உண்டியல் மூலமாக சக ஊழியர்களிடமும், பொதுமக்களிடம் நிதி வசூலித்து அதை அரசிடம் ஓப்படைப்பர்.
அதன் படி இன்று கோவை மாநகரை சேர்ந்த ஊர்காவல் படை வீரர்கள் இன்று கொடி நாள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை மாநகரின் முக்கிய இடங்களிலும், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் நிதியை வசூலித்தனர்.
கோவையில் கொடி நாள் நிதி திரட்டும் பணியில் ஊர் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்க ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 7-ம் நாள் கொடி நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில் அரசு துறை அலுவலர்கள் உண்டியல் மூலமாக சக ஊழியர்களிடமும், பொதுமக்களிடம் நிதி வசூலித்து அதை அரசிடம் ஓப்படைப்பர்.
அதன் படி இன்று கோவை மாநகரை சேர்ந்த ஊர்காவல் படை வீரர்கள் இன்று கொடி நாள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை மாநகரின் முக்கிய இடங்களிலும், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் நிதியை வசூலித்தனர்.