கோவை, டிசம்பர் 8
பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் நிது (28) தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுனராக பணி புரிகிறார்.
அதே பகுதி பகுதியை சேர்ந்தவர் பிளசி (21). பொறியியல் பட்டதாரியான இவரும் நிதுவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.
இவர்கள் காதலுக்கு இருவரது வீட்டில் இருந்தும் எதிர்ப்பு வந்ததால் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், தங்கள் உயிருக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருவரும் தஞ்சமடைந்தனர்.

இது தொடர்பாக நிது செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நாங்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் வீடுகளில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி போத்தனூர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டோம்.
அப்போது முதல் எங்கள் வீடுகளில் இருந்து எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்'என்றார்.
பாதுகாப்பு கேட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் நிது (28) தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுனராக பணி புரிகிறார்.
அதே பகுதி பகுதியை சேர்ந்தவர் பிளசி (21). பொறியியல் பட்டதாரியான இவரும் நிதுவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.
இவர்கள் காதலுக்கு இருவரது வீட்டில் இருந்தும் எதிர்ப்பு வந்ததால் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், தங்கள் உயிருக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருவரும் தஞ்சமடைந்தனர்.

இது தொடர்பாக நிது செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நாங்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் வீடுகளில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி போத்தனூர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டோம்.
அப்போது முதல் எங்கள் வீடுகளில் இருந்து எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. இதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்'என்றார்.