கோவை, டிசம்பர் 6
கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலின் முன்புறம் அம்பேத்கர் போல வேடமணிந்த வழக்கறிஞர்கள் சிலையாக நின்றனர்.

கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதி வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இதற்கு பல்வேறு அரசுத் துறைகள் அனுமதி வழங்கியும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த சமூக நீதிக்கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அம்பேத்கர் போல வேடம் அணிந்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பு சிலை போல் நின்றனர்.

இதில் தொடர்பாக சமூக நீதிக்கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தலைவர் ந.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனைத்து துறைகளும் அனுமதி அளித்துவிட்டன. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற கடிதத்தை கொடுத்துள்ளனர். ஆனால், காவல்துறை மட்டும் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி மறுத்து வருகிறது. அதே நேரத்தில் உரிய அனுமதி பெறாமல் அவினாசி சாலையில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே சட்ட மேதை அம்பேத்கர் முக மூடியை அணிந்து வழக்கறிஞர்கள் சிலை போல் நின்றனர்' இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலின் முன்புறம் அம்பேத்கர் போல வேடமணிந்த வழக்கறிஞர்கள் சிலையாக நின்றனர்.

கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதி வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இதற்கு பல்வேறு அரசுத் துறைகள் அனுமதி வழங்கியும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த சமூக நீதிக்கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அம்பேத்கர் போல வேடம் அணிந்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பு சிலை போல் நின்றனர்.

இதில் தொடர்பாக சமூக நீதிக்கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தலைவர் ந.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனைத்து துறைகளும் அனுமதி அளித்துவிட்டன. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற கடிதத்தை கொடுத்துள்ளனர். ஆனால், காவல்துறை மட்டும் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி மறுத்து வருகிறது. அதே நேரத்தில் உரிய அனுமதி பெறாமல் அவினாசி சாலையில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே சட்ட மேதை அம்பேத்கர் முக மூடியை அணிந்து வழக்கறிஞர்கள் சிலை போல் நின்றனர்' இவ்வாறு அவர் கூறினார்.