கோவையில் அம்பேத்கர் சிலையை நிறுவ அனுமதியளிக்க வலியுறுத்தி சிலை போல் நின்ற வழக்கறிஞர்கள்

கோவை, டிசம்பர் 6

கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலின் முன்புறம் அம்பேத்கர் போல வேடமணிந்த வழக்கறிஞர்கள் சிலையாக நின்றனர்.



கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதி வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இதற்கு பல்வேறு அரசுத் துறைகள் அனுமதி வழங்கியும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த சமூக நீதிக்கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அம்பேத்கர் போல வேடம் அணிந்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பு சிலை போல் நின்றனர்.



இதில் தொடர்பாக சமூக நீதிக்கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தலைவர் ந.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனைத்து துறைகளும் அனுமதி அளித்துவிட்டன. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற கடிதத்தை கொடுத்துள்ளனர். ஆனால், காவல்துறை மட்டும் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி மறுத்து வருகிறது. அதே நேரத்தில் உரிய அனுமதி பெறாமல் அவினாசி சாலையில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே சட்ட மேதை அம்பேத்கர் முக மூடியை அணிந்து வழக்கறிஞர்கள் சிலை போல் நின்றனர்' இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...