கோவை, டிசம்பர் 5
ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகத் தொழிலாளர் நலத்துறை மூலம் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு வராத மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து துப்புரவுப் பணியாளர்கள் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 2,035 துப்புரவு பணியாளர்கள் மற்றும் 300 ஓட்டுநர்கள், கிளீனர்களுக்கு சட்டப்படி ஊதியம், போனஸ், பணி நிரந்தரம் மற்றும் அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை வழங்கக்கோரிக் கடந்த அக்டோபர் மாதம் 19 மற்றும் 20-ம் தேதிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து நடந்தப் பேச்சுவார்த்தையில் மூன்று வாரக் காலத்திற்குள் சட்டப்படிச் சம்பளம் மற்றும் போனஸை வழங்குவதாக மாநகராட்சி நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தும், இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி தொழிலாளர் நலத்துறையில் டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து தொடர் போராட்டம் நடத்தப்போவதாகத் துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டது. அப்போது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவதால் போராட்டம் நடத்த வேண்டாம் எனத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதின் பேரில், 1-ம் தேதி நடைபெற இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று தொழிலாளர் நலத்துறை அதிகாரி முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை சங்கங்கள் சார்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொள்ளாததால் துப்புரவு பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், பேச்சுவார்த்தைக்கு வராத மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து தொழிலாளர் நலத்துறை அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து வீடு திரும்பாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகத் தொழிலாளர் நலத்துறை மூலம் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு வராத மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து துப்புரவுப் பணியாளர்கள் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 2,035 துப்புரவு பணியாளர்கள் மற்றும் 300 ஓட்டுநர்கள், கிளீனர்களுக்கு சட்டப்படி ஊதியம், போனஸ், பணி நிரந்தரம் மற்றும் அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை வழங்கக்கோரிக் கடந்த அக்டோபர் மாதம் 19 மற்றும் 20-ம் தேதிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து நடந்தப் பேச்சுவார்த்தையில் மூன்று வாரக் காலத்திற்குள் சட்டப்படிச் சம்பளம் மற்றும் போனஸை வழங்குவதாக மாநகராட்சி நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தும், இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி தொழிலாளர் நலத்துறையில் டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து தொடர் போராட்டம் நடத்தப்போவதாகத் துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டது. அப்போது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவதால் போராட்டம் நடத்த வேண்டாம் எனத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதின் பேரில், 1-ம் தேதி நடைபெற இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று தொழிலாளர் நலத்துறை அதிகாரி முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை சங்கங்கள் சார்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொள்ளாததால் துப்புரவு பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், பேச்சுவார்த்தைக்கு வராத மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து தொழிலாளர் நலத்துறை அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து வீடு திரும்பாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.