ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : நடிகர் விஷால், ஜெ. தீபாவின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

டிசம்பர் 05

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா மற்றும் நடிகர் விஷால் ஆகியோரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர்  மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அன்று மாலை வரை 30 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் கடைசி நாளான நேற்று மேலும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று மட்டும் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், தேர்தல் அலுவலக அதிகாரிகளே திணறிவிட்டனர். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி. தினகரன் ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனின் படிவம் B-ல் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. விஷால் வேட்புமனுவில் உறுதிமொழி, கணக்கு விவரங்கள் முறையாக இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எதிர்ப்பு தெரிவித்ததால், நடிகர் விஷாலின் வேட்புமனு பரிசீலனையில் இழுபறி ஏற்பட்டது. தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். இதில் முன்மொழியாத 2 நபர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. இது உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்டது. இதனையடுத்து நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். 

இதனிடையே, சொத்து மற்றும் வழக்கு விபரங்கள் அடங்கிய படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் அதிகாரி நிராகரித்தார். ஏற்கனவே நேற்று பேட்டி அளித்து தீபா  தனது வேட்புமனு நிராகரிக்கப்படும் எனக் கூறி இருந்தார்.

இது குறித்து இன்று  தீபா பேட்டி அளிக்கையில், நான் ஏற்கனவே இது குறித்து கூறி இருந்தேன். எனக்குப் போன் மூலம் மிரட்டல் வந்தது. நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்யாதீர்கள், செய்தாலும் நிராகரிக்கப்படும் என 2 நாட்களுக்கு முன்னரே என்னிடம் கூறினார்கள். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போதே எனக்கு பல்வேறு இடையூறுகள் இருந்தது. எனக் கூறினார்

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : ஆர்.கே. நகர் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,28,234 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், 1,10,903 ஆண்களும், 1,17,232 பெண்களும் உள்ளனர். 3-ம் பாலினத்தினர் 99 பேர் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...