மண் வளத்தைப் பாதுகாப்பதில் மண்ணியல் விஞ்ஞானிகளின் பங்கு மிகவும் முக்கியமானது : துணைவேந்தர்

கோவை, டிசம்பர் 05

மண் வளத்தைப் பாதுகாப்பதில் மண்ணியல் விஞ்ஞானிகளின் பங்கு மிகவும் முக்கியமானதுஎன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கு. ராமசாமி இன்று கூறினார்



தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இயற்கை வள மேம்பாட்டு இயக்கத்தில் அமைந்துள்ள மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் சார்பில் இன்று உலக மண் தினம் கொண்டாடப்பட்டது. அதில் தலைமையேற்ற  துணைவேந்தர்இன்றைய வேளாண் மண் அறிவியல் விவசாயிகளை முன்னிலைப் படுத்தி அமையவேண்டும் என்றும் குறிப்பிட்டார்

 

துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் கோ. அருள்மொழிசெல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். பயிர் மேலாண்மை இயக்குநர் சி. ஜெயந்தி,  பி.ராமமூர்த்தியின் ஆறாவது நினைவு விரிவுரை ஆற்றிய நாக்பூரின் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் தேசிய மண் அளவை மற்றும் நிலப்பயன்பாடு திட்டமிடல் மைய முன்னாள் இயக்குநர் எம். வேலாயுதம் அறிவியல் பணிகளை எடுத்துரைத்தார். 



  

விவசாய நிலங்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக 2015 ஆம் ஆண்டில் தேசிய மண் சுகாதார அட்டைத் திட்டம் தொடங்கப்பட்டது. நிலையான பசுமை புரட்சிக்கு முன்னோடி திட்டமாக மண்வளத்தைப் பராமரித்தல் மற்றும் மேம்படுத்தலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மண் பரிசோதனை ஆய்வகங்கள் மூலம் மண்ணைப் பரிசோதித்து உரப் பரிந்துரை அளிப்பதால் மண் வளம் பாதுகாக்கப்படுவதோடு பெருகி வரும் மக்கள் தொகைக்கான உணவு உற்பத்தியையும் அடைய முடிகிறது.

மண்ணின் மகத்துவத்தை அறிந்து ஐ.நா சபையானது கடந்த 2015 ஆம் ஆண்டைச் சர்வதேச மண் வருடமாக அறிவித்தது. வியன்னாவிலுள்ள சர்வதேச மண்ணியல் அமைப்பு 2015 முதல் 2024 வரையுள்ள 10 ஆண்டுக் காலத்தை மண்ணிற்கானதாக அறிவித்தது. இந்நிகழ்வின்போது, பயிர்களுக்கும், மண்வளத்திற்கும் மகசூல் இலக்கிற்கும் ஏற்ற உரப்பரிந்துரைகள் தமிழ்நாட்டின் பழங்குடி கிராமங்களில் விரிவாக்கச் செயல்பாடுகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் என்ற தமிழ் நூல் வெளியிடப்பட்டது. இந்நூலில், பயிர் ஊட்டச்சத்துக்களின் செயல்பாடுகள் மற்றும் பற்றாக்குறை அறிகுறிகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. 

மேலும், மண்ணியல் துறையில் செயல்படும் அகில இந்திய ஒருங்கிணைந்த மண் ஆய்வு மற்றும் பயிர் ஏற்புத்திறன் தொடர்பளவு திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பழங்குடி கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கச் செயல்பாடுகள் பற்றிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...