டிசம்பர் 05
தொப்பி சின்னம் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அணிக்கு வழங்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டி.டி.வி. தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதே நேரத்தில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தனக்கு தொப்பி சின்னம் வழங்கக்கோரி அவர் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரனின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்று தெரிவித்து, அவரது மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி இந்தர்மித் கவூர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொப்பி சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொப்பி சின்னம் தொடர்பான வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அணிக்கு வழங்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டி.டி.வி. தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதே நேரத்தில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தனக்கு தொப்பி சின்னம் வழங்கக்கோரி அவர் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரனின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்று தெரிவித்து, அவரது மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி இந்தர்மித் கவூர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொப்பி சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.