கோவை, டிசம்பர் 05
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஒன்று கூடு ஜெயலலிதா உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அதிமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று, அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலையின் அருகே புதிதாக அமைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வைக்கப்பட்ட இந்த புதிய சிலைகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என யாரும் செல்லாத நிலையில், இன்று முதல் முறையாகக் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் இந்த புதிய சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க ஜெயலலிதாவின் உருவப்படம் மற்றும் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் ஒன்று கூடு ஜெயலலிதா உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அதிமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று, அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலையின் அருகே புதிதாக அமைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வைக்கப்பட்ட இந்த புதிய சிலைகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என யாரும் செல்லாத நிலையில், இன்று முதல் முறையாகக் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் இந்த புதிய சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க ஜெயலலிதாவின் உருவப்படம் மற்றும் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.