7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, டிசம்பர் 4

திட்டப்பணிக்கு எனத் தனியாக பணியாளர்களை நியமித்தல் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மண்டல நில அளவை அலுவலர்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தின் போது, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாகத் துணை ஆய்வாளர் தேர்வில் உள்ள குறைகளை களையவும், திட்டப்பணிக்கு எனத் தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மாவட்ட அளவில் பணியாளர்களின் பணிமாறுதல் தொடர்பாக இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவு, ஊழியர்களிடம் குழப்பத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர்.



மேலும், உயர்பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதால் நிர்வாகமும், ஊழியர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள்,  அனைத்து நில அளவைக் களப்பணியாளர்களின் நாட்குறிப்புகளை எளிமைப்படுத்திடவும், நிலஅளவையர் அனைவருக்கும் பவானிசாகர் நிர்வாகப் பயிற்சியினை வழங்கி களப்பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயணப்படி ஊதியத்துடன் பட்டியலிட்டு வழங்கிட வலியுத்தியும்,  கோஷங்களை எழுப்பினர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...