கோவை, டிசம்பர் 4
உலக மாற்றுதிறனாளிகள் தினம் டிசம்பர் 3 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி காதுகேளாதோர் பள்ளியில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
இதில் நேரு மாமா, மருத்துவர், ஏஞ்சல், ராணுவ வீரர், போலீஸ், விநாயகர், தமிழ் வாத்தியார், ஜெண்டில்மேன் போன்ற வேடங்களை அணிந்து மாணவர்கள் அசத்தினர்கள்.
இப்பள்ளியில் காதுகேளாதோர், ஆடிசம், மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மேலும் பள்ளி செல்ல தயார் செய்யும் மையம் சிறப்பு ஆசிரியர் எஸ். புஷ்பவள்ளி கூறுகையில் " மாற்று திறனாளி மாணவர்களுக்கு எங்கள் மையத்தில் சிறப்பு பிசியோதிரபி, பேச்சு பயிற்சி போன்றவை சிறப்பாக தரப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் வளர்ச்சியை நேரடியாக காணலாம். அரசாங்கத்தால் இம்மையம் காதுகேளாதோர் பள்ளியில் நடத்தப்படுகிறது இதற்கு கட்டணம் கிடையாது. தனியார் பள்ளிகளை விட இங்கு சிறப்பான பயிற்சிகள் மாணவர்களுக்கு தரப்படுகின்றது," என்றார்.
உலக மாற்றுதிறனாளிகள் தினம் டிசம்பர் 3 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி காதுகேளாதோர் பள்ளியில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
இதில் நேரு மாமா, மருத்துவர், ஏஞ்சல், ராணுவ வீரர், போலீஸ், விநாயகர், தமிழ் வாத்தியார், ஜெண்டில்மேன் போன்ற வேடங்களை அணிந்து மாணவர்கள் அசத்தினர்கள்.
இப்பள்ளியில் காதுகேளாதோர், ஆடிசம், மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மேலும் பள்ளி செல்ல தயார் செய்யும் மையம் சிறப்பு ஆசிரியர் எஸ். புஷ்பவள்ளி கூறுகையில் " மாற்று திறனாளி மாணவர்களுக்கு எங்கள் மையத்தில் சிறப்பு பிசியோதிரபி, பேச்சு பயிற்சி போன்றவை சிறப்பாக தரப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் வளர்ச்சியை நேரடியாக காணலாம். அரசாங்கத்தால் இம்மையம் காதுகேளாதோர் பள்ளியில் நடத்தப்படுகிறது இதற்கு கட்டணம் கிடையாது. தனியார் பள்ளிகளை விட இங்கு சிறப்பான பயிற்சிகள் மாணவர்களுக்கு தரப்படுகின்றது," என்றார்.