குன்னூர் அருகே காட்டெருமை தாக்கியதில் ஒருவர் படுகாயம்


டிசம்பர் 4

குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த காட்டெருமை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.



மலை மாவட்டமான நீலகிரியில் யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக, காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகளிலும், நகரின் மையப்பகுதிகளிலும் உலா வருகின்றன. இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், வாகனங்களில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் காட்டெருமைகளால், விபத்துக்குள்ளாகி பலர் பலத்த காயமடைந்துள்ளனர். 

இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் முனியாண்டி (58) என்பவர் வீட்டு வாசலில் காட்டு எருமை இருப்பதை கவனிக்காமல் வெளியே வந்துள்ளார். அப்போது, அவரை காட்டெருமை தூக்கி வீசியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த முனியாண்டியின் தலையில் பலத்த அடிபட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முதலுதவி செய்யப்பட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 14 தையல் போடப்பட்டது. காட்டெருமைகளின் தொடர் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு வலியுறுத்தினர். 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...