தாமதமாக வந்த வால்பாறை பேருந்து- பயணிகள் அவதி


கோவை, டிசம்பர் 4

வால்பாறை செல்லும் பேருந்து இரவு நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

கோவை, காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 1.30 மணியளவில் வால்பாறைக்கு அரசுப்பேருந்து இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கோவையில் 3ம் தேதியன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு அதிமுக தொண்டர்களை அழைத்து வர பேருந்துகள் மாற்றி இயக்கப்பட்டன. இதில், வால்பாறை பேருந்தும் ஒன்று.

இந்நிலையில், இரவு ஒரு மணியளவில் வால்பாறை செல்லவேண்டிய பேருந்து சேலத்திற்கு சென்றிருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு காந்திபுரம் வந்தடையவில்லை. பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பேருந்துகளும் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. 

பின், தாமதமாக 3 மணியாளவிலேயே பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதனால் இந்த பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்த வால்பாறை பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து, வால்பாறை செல்லவிருந்த பெண் பயணி ஒருவர் கூறுகையில், "ஒரு வயது குழந்தையுடன் நீண்ட நேரமாக பேருந்திற்கு காத்துக்கொண்டு இருக்கிறேன். வழக்கமாக ஒரு மணியளவில் வால்பாறைக்கு புறப்படவேண்டிய பேருந்து இன்னும் இங்கு வந்தடையவில்லை.

சேலம் சென்றிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த பேருந்தில் சென்றால் தான் காலை குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்ல முடியும். மாற்றுப் பேருந்தும் இயக்கப்படவில்லை" என்றார்.

இதுகுறித்து பேருந்து நிலைய அதிகாரி கூறுகையில், "முதலமைச்சர் வருகையையொட்டி பெரும்பாலான பேருந்துகள் மாற்றி இயக்கப்பட்டுள்ளன. தற்போது பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகள் சில பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், வால்பாறை செல்ல மாற்றுப்பேருந்தை இயக்க முடியாது. ஊசிமுனை வளைவுகள் அதிகமுள்ள அப்பகுதிக்கு அனுபவம் வாய்ந்த ஓட்டுநர் தேவை. அதனால், சேலம் சென்றுள்ள வால்பாறை பேருந்து வந்தால் மட்டுமே வால்பாறைக்கு பேருந்து இயக்க முடியும்" என்றார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...