தொடர் கனமழையால் முழுக் கொள்ளளவை எட்டும் கோவை அணைகள்

கோவை, டிசம்பர் 02

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், சிறுவாணி, பில்லூர், ஆழியார் அணைகள், அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 

ஒகி புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. 

மாதம்பட்டி, பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கோவையின் நீர் ஆதரமாக உள்ள சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி, 55 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 52.32 அடியாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சிறுவாணி பகுதியில் 26 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. 

இதேபோல, 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு 2,466 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆழியார் அணை 120 அடி உயரம் கொண்டது. தற்போது, பெய்து வரும் கனமழையால், 85.90 அடி உயரம் எட்டியுள்ளது. அணையின் நீர்வரத்து 883 கனஅடியாக உள்ளது. 

இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தால், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை, தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...