ரகுவின் மரணம்: எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலின் மூலம் அரசியலாக்கப்படுகிறது, என்கிறார் முதலமைச்சர்

கோவை ரகு உயிரிழப்பு வேதனைக்குரியது. பேனரால் உயிரிழப்பு நடக்கவில்லை என்பதை சிசிடிவி ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தை எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலின் மூலம் அரசியலாக்கப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வருந்தினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,அதிமுகவின் கோட்டையான ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறினார். ஆர்.கே.நகர் தொகுதியில் 6ஆம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறேன். ஒரு இயக்கம் ஒன்றாக இணையும் போது காலக்கெடு நிர்ணயிப்பது சரியாகாது. அணிகள் இணைந்தால் விலகிவிடுவதாக கூறியவர் (தினகரன்), தற்போது என்ன செய்து வருகிறார் என்பதை அனைவரும் அறிவர். 

மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை சீரமைக்கவும், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தலைமையில் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் தங்கமணி, உதயக்குமார், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தில் புயலின் காரணமாக 3,750 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதை சீரமைக்க 2,000 மின்சாரத்துறை அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

பொதுமக்கள் நிவாரணப் பணிகளை பெறக் கட்டுப்பாட்டு அறையும், தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடலுக்கு 29 படகில் சென்ற மீனவர்களில் 18 படகுகளில் சென்றவர்கள் கரை திரும்பி விட்டனர். 11 படகில் சென்ற 30 மீனவர்களைக் காப்பாற்ற கடலோர காவல்படை மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை நீரை சேமிக்க 3 ஆண்டுகால திட்டத்தில் ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டு,  இந்தாண்டு ரூ. 350 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.  இதைத்தவிர, குடிபராமத்து பணிகள் மூலமாகவும், மழை நீரை சேமிக்க நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட பாலம் இடிந்தது தொடர்பாக விசாரிக்கப்படும். அதிமுக சார்பில் மாதத்தில் அதிக அளவில் கூட்டங்கள் நடத்தப்படுவது, எதிர்க்கட்சிகளால் குறிப்பாக திமுகவால் தாங்க முடியவில்லை. மேலும், அதிமுக அரசு மீது குற்றம் சொல்ல முடியவில்லை என்பதால் ஸ்டாலின் விரக்தியில் பேசி வருகிறார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...