ரகுவின் மரணம்: எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலின் மூலம் அரசியலாக்கப்படுகிறது, என்கிறார் முதலமைச்சர்

கோவை ரகு உயிரிழப்பு வேதனைக்குரியது. பேனரால் உயிரிழப்பு நடக்கவில்லை என்பதை சிசிடிவி ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தை எதிர்க்கட்சிகள் பொய்யான தகவலின் மூலம் அரசியலாக்கப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வருந்தினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,அதிமுகவின் கோட்டையான ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறினார். ஆர்.கே.நகர் தொகுதியில் 6ஆம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறேன். ஒரு இயக்கம் ஒன்றாக இணையும் போது காலக்கெடு நிர்ணயிப்பது சரியாகாது. அணிகள் இணைந்தால் விலகிவிடுவதாக கூறியவர் (தினகரன்), தற்போது என்ன செய்து வருகிறார் என்பதை அனைவரும் அறிவர். 

மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை சீரமைக்கவும், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தலைமையில் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் தங்கமணி, உதயக்குமார், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தில் புயலின் காரணமாக 3,750 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதை சீரமைக்க 2,000 மின்சாரத்துறை அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

பொதுமக்கள் நிவாரணப் பணிகளை பெறக் கட்டுப்பாட்டு அறையும், தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடலுக்கு 29 படகில் சென்ற மீனவர்களில் 18 படகுகளில் சென்றவர்கள் கரை திரும்பி விட்டனர். 11 படகில் சென்ற 30 மீனவர்களைக் காப்பாற்ற கடலோர காவல்படை மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை நீரை சேமிக்க 3 ஆண்டுகால திட்டத்தில் ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டு,  இந்தாண்டு ரூ. 350 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.  இதைத்தவிர, குடிபராமத்து பணிகள் மூலமாகவும், மழை நீரை சேமிக்க நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்ட பாலம் இடிந்தது தொடர்பாக விசாரிக்கப்படும். அதிமுக சார்பில் மாதத்தில் அதிக அளவில் கூட்டங்கள் நடத்தப்படுவது, எதிர்க்கட்சிகளால் குறிப்பாக திமுகவால் தாங்க முடியவில்லை. மேலும், அதிமுக அரசு மீது குற்றம் சொல்ல முடியவில்லை என்பதால் ஸ்டாலின் விரக்தியில் பேசி வருகிறார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...