கோவை, டிசம்பர் 1
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் துவக்கி வைத்தார்.
ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதியன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், 30 கல்லூரிகளைச் சேர்ந்த 1500 மாணவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, இரத்தத்துடன் வரக் கூடிய சளி, எடை குறைதல், பாதுகாப்பான உடல் உறவு, முறையான சிகிச்சை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.

இதில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி, அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்தரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் துவக்கி வைத்தார்.
ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதியன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், 30 கல்லூரிகளைச் சேர்ந்த 1500 மாணவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, இரத்தத்துடன் வரக் கூடிய சளி, எடை குறைதல், பாதுகாப்பான உடல் உறவு, முறையான சிகிச்சை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.

இதில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி, அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்தரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.