செல் போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்கி விபத்து ஏற்பட்டதில் 2,138 நபர்கள் உயிரிழந்துள்ளனர்

கோவை, டிசம்பர் 1

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளால் 17,218 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் 4,091 பேரும், பல்வேறு இருசக்கர வாகன விபத்துக்களில் சிக்கி 5,666 பேரும் குடி போதையில் வாகனம் ஓட்டியதால் 6,131 பேரும், செல் போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்கி விபத்து ஏற்பட்டதில் 2,138 பேரும் உயிரிழந்துள்ளனர். இதை மாணவ மாணவிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.



போக்குவரத்து விதிகளை அனைத்து தரப்பினரும் முறையாக பின்பற்ற வேண்டி கோவை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு போலீசார் விநியோகிதது வருகின்றனர். 

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, கோவை ராஜ வீதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி-யில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இன்று போக்குவரத்து விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.

மாநகர போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைத்த இந்த பயிற்சி வகுப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

அப்போது மாணவிகளிடம் போலீசார் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளால் 17,218 பேர் உயிரிழந்துள்ளனர். 



வருங்கால வாகன ஓட்டிகளான நீங்கள் வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்தால் சாலை விபத்துக்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை வெகுவாக குறையும். சாலை விதிகளை நீங்கள் கடைபிப்பது மட்டுமல்லாது உங்கள் குடும்பத்தினரையும் அவற்றை மதிக்க கற்றுக்கொடுங்கள்.

இவ்வாறு போலீசார் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...