கோவையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் - வைகோ சந்திப்பு

கோவை, நவம்பர் 30

கோவை விமான நிலையத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு "அரசியல் நாகரீகத்துக்காக"  நிகழ்ந்ததாக வைகோ தெரிவித்துள்ளார். 

இந்தச் சந்திப்பிற்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  மத்திய அரசு தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது. பிரதமர் மோடி, நீயூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். இந்தத் திட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல், தோப்புக்கரணம் போடும் அரசாக இருக்கின்றது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் முல்லை பெரியாறு, இடுக்கி அணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும். தமிழகத்தின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து வருகின்றது.

மத்திய அரசின் துரோகத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி தொடர்ந்து போராடுவோம். 

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவில் மோதி உயிரிழந்த ரகுவின் மரணம் வருத்தம் அளிக்கின்றது. இந்த உயிரிழப்பிற்கு அரசேக் காரணம். ஆர்.கே. நகர் தேர்தலில் மதிமுகவின் நிலைப்பாட்டினை வரும் 3-ம் தேதி காலை தெரிவிப்பேன். என்றார்.

இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்குள் சென்ற வைகோ, திமுக செயல்தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சிறிது நேரம் பேசினார். பிறகு, இந்தச் சந்திப்பு தொடர்பாகச் செய்தியாளர்களிடம் மீண்டும் பேசிய அவர், அரசியல் நாகரீகத்துக்காக  இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. சிறிது நேரம் காத்திருந்து பார்ப்பதில் தவறில்லை. விமான நிலையங்களில் சந்திப்பு நடப்பது வழக்கமானது. மேலும், தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...