வெள்ளப் பெருக்குக் காரணமாக குரங்கு அருவியில் குளிக்கத் தடை

கோவை, நவம்பர் 30

தொடர் மழைக் காரணமாக குரங்கு அருவி, பஞ்சலிங்க அருவிகளில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், ஆழியார் – வால்பாறை சாலையில் உள்ள குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதேபோல, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இன்று நள்ளிரவு பெய்யும் மழையின் அளவைப் பொறுத்தே, நாளை அருவிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...