மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், இனி அமேசான், பேடிஎம் போன்றவைகளைப் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. மொபைல் எண்கள், வங்கிக் கணக்கு ஆகியனவும் ஆதாருடன் இணைப்பது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது இன்டர்நெட் கம்பெனிகளின் சேவைகளை பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக பெங்களூருவைச் சேர்ந்த வாடகை கார் நிறுவனமான ஜூம்கார், வாடிக்கையாளர்கள் தங்களின் அடையாளத்திற்காக முன்பதிவின் போது ஆதார் எண்ணை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறி உள்ளது. ஆதார் எண் இல்லாத புக்கிங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
தற்போது, அமேசான் நிறுவனமும், வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை அளிக்கும்படி கேட்டு வருகிறது. ஒருவேளை வாடிக்கையாளர் ஆதார் எண்ணை தர மறுக்கும் பட்சத்தில், அவரைப் பற்றிய பிற விபரங்களை பெற முடிவு செய்துள்ளது. இதே போன்று மொபைல் வேலட்டான பேடிஎம் சேவையை பயன்படுத்தவும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாடகை கார் நிறுவனங்களான ஊபர், ஓலா ஆகியனவும் வாடிக்கையாளர்களை ஆதார் மூலம் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக ஆதார் எண்ணை அளிக்கும்படி கேட்டு வருகின்றன.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. மொபைல் எண்கள், வங்கிக் கணக்கு ஆகியனவும் ஆதாருடன் இணைப்பது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது இன்டர்நெட் கம்பெனிகளின் சேவைகளை பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக பெங்களூருவைச் சேர்ந்த வாடகை கார் நிறுவனமான ஜூம்கார், வாடிக்கையாளர்கள் தங்களின் அடையாளத்திற்காக முன்பதிவின் போது ஆதார் எண்ணை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறி உள்ளது. ஆதார் எண் இல்லாத புக்கிங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
தற்போது, அமேசான் நிறுவனமும், வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை அளிக்கும்படி கேட்டு வருகிறது. ஒருவேளை வாடிக்கையாளர் ஆதார் எண்ணை தர மறுக்கும் பட்சத்தில், அவரைப் பற்றிய பிற விபரங்களை பெற முடிவு செய்துள்ளது. இதே போன்று மொபைல் வேலட்டான பேடிஎம் சேவையை பயன்படுத்தவும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாடகை கார் நிறுவனங்களான ஊபர், ஓலா ஆகியனவும் வாடிக்கையாளர்களை ஆதார் மூலம் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக ஆதார் எண்ணை அளிக்கும்படி கேட்டு வருகின்றன.