பேஸ்புக் ரத்த தானம்: 40 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் விருப்பம்

சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் தளத்தில் சமீபத்தில் வழங்கப்பட்ட ரத்த தானம் அம்சத்திற்கு அதிகப்படியான இந்தியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த அம்சம் மற்ற நாடுகளிலும் வழங்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் ரத்த தானம் செய்பவர்களுக்கு உதவியாய் இருக்கும் நோக்கில் இந்த அம்சம் முதற்கட்டமாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். ரத்தம் தேவைப்படுவோருக்கு மட்டுமின்றி ரத்தம் வழங்குவோரை நிறுவனங்கள் தரப்பில் சுலபமாகத் தொடர்பு கொள்ள பேஸ்புக் டூல்கள் உதவியாய் இருக்கும் என சோஷியல் பிளட் நிறுவனத்தின் துணைத் தலைவர் நயோமி கிளெய்ட் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள், ரத்த வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பேஸ்புக்கில் ரத்த தானம் குறித்த நிகழ்வுகளை உருவாக்க முடியும். இதன்மூலம் ரத்த தானம் செய்ய விரும்புவோரை மிக எளிமையாகத் தொடர்பு கொள்ள முடியும். 

2018-ம் ஆண்டின் துவக்கத்தில் பேஸ்புக் ரத்த தான அம்சம் வங்கதேசத்திற்கும் வழங்கப்படும், இந்தியா போன்றே வங்கதேசத்திலும் வாராவாரம் ரத்த தானம் செய்வோர் தொடர்ந்து விருப்பம் தெரிவிப்பர் என கிளெய்ட் தெரிவித்தார். ரத்த தானம் மட்டுமின்றி பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி புதிய டூல் மற்றும் அம்சங்களைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பாதுகாப்பாக இருக்க உதவி செய்ய முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. 

பேஸ்புக்கில் புதிதாக மென்டார்ஷிப் கனெக்ஷன் புரோகிராம், புதிய நிதி திரட்டும் டூல், ரத்த தான நிகழ்வு மற்றும் தற்கொலை தடுப்பு நிகழ்வு சார்ந்த அம்சங்களை வழங்கப்பட இருப்பதாகச் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

மென்டர்ஷிப் மற்றும் சப்போர்ட் அம்சம் மூலம் வழிகாட்டிகள் மற்றும் உதவி பெறுவோர் இணைந்து நேரடியாகத் தொடர்பு கொண்டு, தொண்டு நிறுவனங்களின் நிகழ்வுகளில் பங்கேற்க முடியும் என கிளெய்ட் தெரிவித்தார். பேஸ்புக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து நிதியும், நேரடியாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...