இரட்டை இலை விவகாரம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு

நவம்பர் 30

இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக, சசிகலா தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது. கடந்த மார்ச் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இரு அணியினரும், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கொண்டாடினர். இதனால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கித் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் ஓபிஎஸ் அணியும் இணைந்தன. இதனால், இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரும் போட்டி, எடப்படி பழனிசாமி, ஓபிஎஸ் அணிக்கும் டி.டி.வி.தினகரன் அணிக்கும் இடையில் மாறியது. இரு தரப்பினரும் தலைமை தேர்தல் ஆணையத்தில் தங்களுக்குச் சாதகமான ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். அந்த ஆவணங்கள் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் 7 கட்டங்களாக விசாரணை நடத்தினர். கடந்த 24-ந்தேதி இந்த வழக்கில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு “இரட்டை இலை” சின்னத்தை ஒதுக்கீடு செய்து அறிவித்தனர்.

நாடாளுமன்றம், சட்டசபை மற்றும் செயற்குழு- பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ள டிடிவி தினகரன் அணியினர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக எந்த உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தாலும், தங்கள் கருத்தை கேட்காமல் வெளியிடக் கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் ஏற்கனவே கேவியட் மனுதாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...