ஜனவரியில் புதிய கட்சிப் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறார் ரஜினி ?

நவம்பர் 29 

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என அவருடைய சகோதரர் சத்திய நாராயணராவ் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து பரபரப்பான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கடந்த மே மாதம் சென்னையில் ரசிகர்களை அழைத்து, நாட்டில் அமைப்பு கெட்டுக் கிடக்கிறது, போருக்குத் தயாராக இருங்கள் என அவர் கூறியது அவர் அரசியல் வருகைப் பற்றிய விவாதங்களை கிளப்பி இருக்கின்றன, ரசிகர்களும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். அரசியலுக்கு வரமாட்டேன் என்று இதுவரை அவர் மறுக்கவில்லை. அரசியலில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்களில் ரஜினிகாந்த் ஈடுபட்டு வருவதாகவும், கட்சி பெயர், கொடி, சின்னங்களை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. 

விரைவில் ரசிகர்களைக் கூட்டி அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால், கமல்ஹாசன் திடீரென்று அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருப்பது ரஜினிகாந்தை யோசிக்க வைத்து இருக்கிறது. இதனால், அரசியலுக்கு வர அவர் தயங்குவதாகவும் கூறப்பட்டது. ஆனால், ரசிகர்கள் தரப்பில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்கின்றனர். அரசியலில் ஈடுபடுவதற்கான அனைத்து வேலைகளையும் ரகசியமாக அவர் முடித்து விட்டார். கட்சி பெயரை அறிவிப்பது மட்டுமே பாக்கி என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

சமீபத்தில் ரஜினி காந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், களத்தில் இறங்க வேண்டியதற்கு அவசரம் இல்லை என்றார். 

இந்நிலையில், அரசியல் கட்சித் தொடங்குவதற்கான அறிவிப்பை ஜனவரி மாதம் ரஜினிகாந்த் வெளியிடுவார் என அவருடைய சகோதரர் சத்திய நாராயணராவ் தகவல் தெரிவித்து உள்ளார். தர்மபுரியில் ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் பேசுகையில், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ல் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகாது எனக் குறிப்பிட்டார். இதனிடையே, சென்னையில் லதா ரஜினிகாந்த் பேசுகையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவருடைய தனிப்பட்ட முடிவாகும், அவருக்கு உறுதுணையாக இருப்பதுதான் என்னுடைய வேலையாகும். என்றார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...