வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்புப் பயிற்சி

கோவை, நவம்பர் 27

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் இளைஞர்களுக்காக திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களால் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களது வேலை பெறும் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் நவம்பர் 29ம் தேதியன்று காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறன் பயிற்சி அளிக்கும் பல நிறுவனங்கள் பங்கேற்று பயிற்சிகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். 

முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ள இந்த பயிற்சிக் காலத்தில் உதவித் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும், சிறந்த தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் பயிற்சி பெறுவதால் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதில் பங்கேற்று பயனடையலாம்.

இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...