வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்புப் பயிற்சி

கோவை, நவம்பர் 27

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் இளைஞர்களுக்காக திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களால் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களது வேலை பெறும் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் நவம்பர் 29ம் தேதியன்று காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திறன் பயிற்சி அளிக்கும் பல நிறுவனங்கள் பங்கேற்று பயிற்சிகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். 

முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ள இந்த பயிற்சிக் காலத்தில் உதவித் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும், சிறந்த தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் பயிற்சி பெறுவதால் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதில் பங்கேற்று பயனடையலாம்.

இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...