பிறப்பு, இறப்புச் சான்று பெறக் கட்டணம் அதிரடி உயர்வு - பொதுமக்கள் கடும் அதிருப்தி

சென்னை : தமிழகத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் பெறுவதற்கான கட்டணம் 50 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள் உள்ளாட்சி அமைப்புகள், சுகாதார ஆய்வாளர் அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், பத்திர பதிவு அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சான்றிதழ் பெறுவதற்கு ஒவ்வொரு நிலைக்கும் ஒரு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக இரண்டு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கட்டணம் குறைவாக இருந்ததால் அதைப் பொது மக்கள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. எனினும் சில இடங்களில் சான்றிதழ் பெறுவதற்காக பணம் அதிகமாக கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 

இந்நிலையில் கட்டண விபரத்தை மாற்றியமைத்து தமிழக அரசு சுகாதார துறை ஆணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணை சில இடங்களில் முன் தேதியிட்டு அமல் செய்யப்பட்டுள்ளது. 

பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் கடந்த மாதம் 26ம் தேதியிட்டு அமல் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகள் தவிர்த்து பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பிறப்பு, இறப்புப் பதிவு செய்ய அந்தந்த பிறப்பு இறப்பு அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும். இறப்போ, பிறப்போ முதல் ஒரு வருடம் மட்டுமே இங்கு சான்றிதழ் பெற இயலும். 

அடுத்த இரண்டு ஆண்டுக்கான சான்றிதழ்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும். மூன்று ஆண்டுகளை கடந்த சான்றிதழ்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் வாங்க வேண்டும். ஆனால் நகராட்சி, மாநகராட்சியில் இது போன்ற அலைச்சல் கிடையாது. ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ளலாம். இதனிடையே ஆன்லைன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சான்றிதழுக்கான கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு முன் இருந்த 2 ரூபாய் கட்டணம் 100 ஆகவும், 5 ரூபாய் கட்டணம் 200 ஆகவும், 10 ரூபாய் கட்டணம் 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு 200 ரூபாய், கூடுதல் நகல் பெற ஒவ்வொரு நகலுக்கும் தலா 200 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. 

பதிவு அலுவலகத்தில் தேடுதல் கட்டணமாக ஒரு வருடத்துக்குட்பட்டது ரூ.100, கூடுதல் ஒவ்வொரு ஆண்டுக்கு ரூ.100, சான்று ஒன்றுக்கு ரூ.200, கூடுதல் சான்று ஒன்றுக்கு ரூ.200, பதிவில்லா சான்று ஆண்டு ஒன்றுக்கு ரூ.2ல் இருந்து 100 என பதிவு அலுவலகத்தில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது போன்று நகராட்சி பகுதிகளிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...