கோவை அருகே பயணிகள் ஆட்டோ விபத்துக்குள்ளாகி பள்ளி மாணவர்கள் ஆசிரியை காயம்

கோவை, நவம்பர் 24

கோவை அருகே பயணிகள் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியை காயமடைந்தனர்.



கோவை மாவட்டம் தென்னம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு, வேலைக்கு செல்வோர் மினி பஸ் மற்றும் பயணிகள் ஆட்டோவைவையே நம்பி உள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சங்கோதிபாளையம் சமத்துவபுரத்தில் இருந்து பயணிகள் ஆட்டோவில் அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என 12 க்கும் மேற்பட்டோர் அரசூர் ஆரம்ப பள்ளிக்கு பயணித்துள்ளனர். அப்போது ஆட்டோ அரசூர் மின்வாரிய அலுவலகம் அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் மற்றும் அதே பள்ளியை சார்ந்த ஆசிரியை ஒருவர் காயமடைந்தனர். 

இதனை தொடர்ந்து அவர்களை மீட்ட பொதுமக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு 3 மாணவர்களையும் ஆசிரியரையும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் ஆட்டோக்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது.

இதனை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதுவே இன்று ஏற்பட்ட விபத்திற்கு காரணம் என்றும், அதிகாரிகள் இப்பிரச்சனையில் தலையிட்டு பேருந்து வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...