முறையான ஊதியம் வழங்கக் கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கோவை, நவம்பர் 23

ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போன்றே இணையான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி அலுவலகங்களில் 12,524 ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை அந்தந்த மாவட்ட கருவூலங்கள் மூலமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இன்று பணிக்கு வந்த ஊழியர்கள், கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பணிகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 



இதனிடையே, எங்களது இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...