வரும் 25-ம் தேதி உயர்கல்வியில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

கோவை, நவம்பர் 22:

தமிழகக் கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளின் கழகம் சார்பில் உயர்கல்வியில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருது வழங்கும் விழா வரும் 25-ம் தேதி நடக்கிறது. 

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வியில் சிறந்து விளங்கியவர்களுக்கு தமிழகக் கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளின் கழகத்தின் சார்பில் விருது வழங்கிக் கவுரவிக்கப்படுகிறது. உயர்கல்வியில் பெரும் பங்களிப்பை அளித்தவர்கள், சிறந்து விளங்கியவர்கள், சிறந்த ஆசிரியர்கள், சிறந்த தலைமையாசிரியர் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 

வரும் 25-ம் தேதி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஐடிசி வெல்கம் ஓட்டலில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில், அரசு உயர்கல்வித்துறையின் செயலாளர் சுனில் பலிவால், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி மற்றும் என்ஏஏசியின் வடக்கு பிராந்திய துணை ஆலோசகரும், ஒருங்கிணைப்பாளருமான பொன்முடிராஜ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். 

இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாநில அளவிலான கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் உயர்கல்வித்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து இந்தக் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்படுகிறது. இதில், கலந்து கொள்ள விரும்புபவர்கள் இன்று மாலைக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...