டிச.,16-ல் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் - ராகுல் காந்தியைத் தேர்வு செய்யத் தீர்மானம் நிறைவேற்றம்

நவம்பர் 20: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் டிசம்பர் 16ம் தேதி நடக்கும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில், கட்சியின் தற்போதைய துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தேடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்க படுகிறது. 

கடந்த 1998ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா இருந்து வருகிறார். சுமார் 19 ஆண்டுகள் அவரே தலைவர் பதவியில் இருப்பதாலும், அவரது உடல்நிலை கருதியும் புதிய தலைவரை தேர்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சோனியா தலைமையில் இன்று நடந்தது. 

கூட்டத்திற்குப் பிறகு கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 1-ம் தேதி துவங்கி, டிசம்பர் 4-ம் தேதி வரை நடக்கும். டிசம்பர் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, புதிய தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதே சமயம், கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்வது தொடர்பான தீர்மானம் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தத் தேர்தலில் ராகுலை தவிர வேறும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், வேட்புமனு தாக்கலில் கடைசி நாளில் ராகுலை கட்சியின் தலைவராக முறைப்படி அறிவிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி அறிவிக்கப்பட்டாலும், குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே கட்சியின் தலைமை பொறுப்பை அவர் ஏற்பார் எனவும், அதுவரை கட்சி தலைவராக சோனியாவே தொடர்வார் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . ஒருவேளைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு எதிராக அமைந்தால், அடுத்தகட்ட முடிவு குறித்து பின்னர் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...