பொய் வழக்கு தொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: காவல்துறை குறைதீர்ப்பு முகாமில் முன்னாள் காவலர் மனு

கோவை, நவம்பர் 18: பொய் வழக்கு தொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற காவல்துறை குறைதீர்ப்பு முகாமில் முன்னாள் காவலர் ஒருவர் மனு அளித்தார்.



கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (74). கோவையில் தலைமைக்காவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் இன்று காலை பி.ஆர்.எஸ். மைதானத்திற்கு மனுவுடன் வந்தார். மனுவில், அங்காத்தாள், சரவணக்குமார் என்ற இருவர் தன் மீது பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இது குறித்து காவல்துறையிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், 'பத்திரம் ஒன்றை திருடியதாக என்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இது முற்றிலும் போலியானது. இது தொடர்பாக போலீசாரிடம் தொடர் புகார் அளித்து வருகிறேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. எனவே, காவல்துறை இயக்குனரிடம் மனு அளிக்க வந்துள்ளேன். என்றார்.

இதே போல், விபத்து ஒன்றில் கால்களை இழந்த பெண் காவலர் ஒருவர் குறை தீர்ப்பு முகாமிற்கு மனு அளிக்க வந்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...