வாழை உற்பத்தியில் பின்னோக்கி செல்லும் கோவை மாவட்டம்

கோவை, நவம்பர் 18: கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பிறபகுதிகளில் உள்ள வாழை விவசாயிகள் உரம்போன்ற அத்தியாவசிய பொருட்களின்விலை உயர்வால் வாழை உற்பத்தியை குறைத்துள்ளனர்.

தேசிய அளவில் வாழைப்பழ உற்பத்தியில் முதலிடத்தில் இருந்து வந்த தமிழகம், அதன் முக்கியத்துவத்தை இழக்கும்அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து இழப்பை சந்தித்துவரும் வாழை விவசாயிகள் பலரும்மாற்றுப்பயிர் சாகுபடிக்கு தேடிசெல்வதால் வாழை உற்பத்தி குறைந்து வருகிறது. இதன் காரணமாக விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்கள்தான் வரிசைப்படி தேசிய அளவில் வாழைஉற்பத்தியில் முன்னணியில் உள்ளன. "இந்தியாவில்ஆண்டுஉற்பத்தி 2.97 கோடிடன் என்ற நிலையில் தமிழகத்தின்வாழைசாகுபடி பரப்பளவு 2.85 லட்சம் ஏக்கர் இதில் ஆண்டுக்கு 56 லட்சம் டன் வாழைத்தார் உற்பத்தி என்ற அளவில்முதலிடத்தில் உள்ளது" என வாழை விவசாயிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பூவன், செவ்வாழை, ரோபஸ்டா, ரஸ்தாளி, விருப்பாச்சி, நேந்திரன் போன்ற வாழைவகைகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. வாழை உற்பத்தியில் தமிழகத்தின், கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி,தூத்துக்குடி, கரூர், சேலம், மதுரை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தான் வாழைசாகுபடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கன.

கோவை மாவட்டத்தில் வாழை விவசாயம் குறைந்துக்கொண்டே வருகிறது. கோவை மாவட்டத்தின்,மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் போன்ற பகுதிகளில் வாழை விவசாயமே பிரதான தொழில். இங்கு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் விளையும் வாழையின் தரமும் சுவையும் அதிகம் என்பதால் இந்திய அளவில் வரவேற்பும் அதிகம்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் பகுதியில் வாழைவிவசாயம் செய்துவரும் செ.வேலுச்சாமி கூறுகையில் "சுமார் 500 ஏக்கருக்கும் மேல் வாழை விவசாயம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றுவருகிறது. இங்கு விளையும் வாழைகளின் தரம் மிகவும் நன்றாக உள்ள காரணத்தினால் வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.வாழை விவசாயத்தை நம்பி மட்டுமே 1000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றது" என்றார் அவர்.

சமீபகாலமாக தண்ணீர் பற்றாக்குறை, பத்துமாத பயிரான வாழைக்கு பயன்படுத்தும் உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் கடுமையானவிலையேற்றம், சூறாவளி போன்ற திடீர் இயற்கை சீற்றம் மற்றும் வனவிலங்குகளால் தொந்தரவு போன்ற காரணங்களால் வாழை விவசாயம் பாதிப்படைந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இயற்கைசீற்றங்களால் சேதமடையும் வாழைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படாததும் விவசாயம் குறைவிற்கு காரணமாக உள்ளது.

இதுகுறித்து விவசாயி சக்திவேல் கூறுகையில் "பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் கடன்களை வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். அவ்வாறு கஷ்டப்பட்டு விவசாயம் செய்தும் உரியலாபம் கிடைக்காமல் சில சமயங்களில் நஷ்டம் ஏற்படுகிறது. மழை, புயலால் சேதம் அடையும் சமயத்தில் உரிய இழப்பீடு கிடைக்காமல் தவிக்கிறோம் இதேநிலை நீடித்தால் வாழை விவசாயத்தை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை" என்றார் அவர்.

பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பம் போன்ற காரணங்கள் விளைச்சல் குறைகிறது. இது போன்ற காரணங்கினால் மாற்று விவசாயத்தை தேடி விவசாயிகள் செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

பணப்பயிரான வாழை அரசின் தோட்டக்கலைதுறையின் கீழ் வருவதால் இத்துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள், வாழை விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு தேவையானஆலோசனைகள், நவீன வேளாண் தொழில்நுட்ப உதவிகள் செய்வதோடு வாழை விவசாயத்தில் நூறுசதவீதம் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்தி ஊக்குவித்தால் தண்ணீர் தேவை குறையும்.

அதே போல இயற்கை சீற்றங்களினால் வாழைமரங்கள் பாதிப்படையும் போது உடனடியாக உரிய நிவாரணம் வழங்கவும் செய்தாலே வாழை உற்பத்தியை அதிகரித்து இதன் விலையினையும் கட்டுக்குள்வைத்திட உதவும் என்கின்றனர் வேளாண் வல்லுனர்கள்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...