கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக்கடத்த முயற்சி : மர்ம நபர்கள் துணிகரம்

கோவை, நவம்பர். 17

பாதுகாப்பு நிறைந்த கோவை மத்திய சிறை வளாகத்தில் இன்று அதிகாலை 4 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்த முயற்சி நடந்துள்ளது.



கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தனமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

அங்கு உள்ள டி.ஐ.ஜி அலுவலகம் அருகே இருந்த சந்தன மரங்கள் சுமார 20 " சுற்றளவுக்கு வளர்ந்திருந்தன.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் சிறை வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டினர். 



 அதோடு, மரத்தை வெட்ட பயன்பட்ட ரம்பம், அரிவாள்,கடப்பாறை ஆகியவற்றை மர்ம நபர்கள் அதே இடத்தில் போட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர். .



இது தொடர்பாக, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மத்திய சிறையின் முதல் அடுக்கில் தமிழக போலீசார், இரண்டாம் அடுக்கில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, மூன்றாவதாக சிறை காவலர்கள் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரம் வெட்டப்பட்டு இருப்பதால், அதன்  பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...