உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது- சுகாதாரத் துறை அமைச்சர் பேட்டி


கோவை, நவம்பர் 17

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் கூறினார்.

கோவையில், தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த தமிழக சுகாதார துறை அமைச்சர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சென்னை மருத்துவ தலைமையிடம் என்பதை மாற்றி அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, மாவட்ட மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 280 கோடி ரூபாய் ஜெய்கா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் 837 ரத்தவகை கண்டறியும் கருவி வழங்கப்பட்டுள்ளன. மேலும், தமிழகம் முழுவதும் சமீபத்தில் 800 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத் துறையில் போலியாக செயல்படும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...