கோவை, நவம்பர் 17
ராணி பத்மாவதியின் வரலாற்றைத் தவறாக சித்தரிக்கும் பத்மாவதி திரைப்படத்தை இந்தியாவில் வெளியிடக் கூடாது என ராஜ்புட் ராஷ்டிரிய கர்ணி சேனாவின் அகில இந்திய தலைவர் சுக்தேவ்சிங் கோகா வலியுறுத்தியுள்ளார்.

ராஷ்டிரிய கர்ணி சேனாவின் ஆலோசனை கூட்டம் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் பின் அந்த அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கோகா செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் டிசம்பர் 1-ம் தேதி இந்தியா முழுவதும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவதி திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்தத் திரைப்படம் ராணி பத்மாவதியின் வரலாற்றைத் திரித்து கூறி அரசக் குடும்பத்தையும், இந்து கலாச்சாரத்தையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. இந்தத் திரைப்படம் வெளியிடக்கூடாது. மீறி வெளியிட்டால் போராட்டம் தீவிரமாகும். ராணி பத்மாவதி குறித்து தவறான கருத்தை ஏற்படுத்தும் இந்தப் படத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ராணி பத்மாவதியின் வரலாற்றைத் தவறாக சித்தரிக்கும் பத்மாவதி திரைப்படத்தை இந்தியாவில் வெளியிடக் கூடாது என ராஜ்புட் ராஷ்டிரிய கர்ணி சேனாவின் அகில இந்திய தலைவர் சுக்தேவ்சிங் கோகா வலியுறுத்தியுள்ளார்.

ராஷ்டிரிய கர்ணி சேனாவின் ஆலோசனை கூட்டம் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் பின் அந்த அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கோகா செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் டிசம்பர் 1-ம் தேதி இந்தியா முழுவதும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவதி திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்தத் திரைப்படம் ராணி பத்மாவதியின் வரலாற்றைத் திரித்து கூறி அரசக் குடும்பத்தையும், இந்து கலாச்சாரத்தையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. இந்தத் திரைப்படம் வெளியிடக்கூடாது. மீறி வெளியிட்டால் போராட்டம் தீவிரமாகும். ராணி பத்மாவதி குறித்து தவறான கருத்தை ஏற்படுத்தும் இந்தப் படத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.